Wednesday, 26 November 2008

மும்பை மேரி ஜான்


மும்பை மேரி ஜான் -- இதன் அர்த்தம் “மும்பை என் உயிர்”



1999 மே மாதம் மும்பை தாஜ் பிரசிடெண்ட் ஹோட்டலில் வேலையில் சேர்ந்தேன். முதலில் சிறிது நாட்களுக்கு மொழி புரியாமல் திண்டாடினாலும் வெகு சீக்கிரம் “ஹிந்தி” பழகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் இந்தியாவில் தீவிரவாதிகளினாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தினாலோ சேதம் உண்டாகும் போது வேதனை படும் என் மனம்; மும்பையில் அவ்வாறு ஏற்படும் போது சிறிது அதிகமாகவே வலிக்கும். அதுவும் தற்போது தாஜ் /ஓபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் வெறியாட்டம் என்னை அதிகமாகவே பாதித்தது.
தற்போது தாக்குதல் நடந்த “Leopold, Taj hotel, CST" ஏரியாவில் நான் திரிந்த நாட்கள் மிக அதிகம். அதுவும் இரவு 12 மணிக்கு “ஷிஃப்ட்” முடிந்த பிறகு தனியாக அந்த ஏரியாவில் சுற்றித் திரிந்த நாட்கள் இன்னமும் நினைவில் உள்ளது. தாஜ் ஹோட்டலின் அருகில் உள்ள “கீராவாலா”வில் காலை 3 மணி வரை நண்பர்களின் “கச்சேரி” நடக்கும். இரவில் தனியாக வீடு திரும்பும் போது ரோட்டில் திரியும் “நபர்கள்”, மெலிதாக கேட்கும் அலையின் ஓசை,படே மியாவின் கபாப், Leopold ன் ”பிட்சர்” பீர்/ Chocolate brownie vanilla ice cream, coloba causeway road என ஒவ்வொரு விஷயமும் இப்போது நினைவில் அதிகமாக வ்ருகிறது.
3 வருடம் மும்பையில்/ தாஜ் பிரசிடெண்ட் ஹோட்டலில் இருந்த சமயத்தை விட லண்டன் வந்த பிறகு இந்தியாவை “மிஸ்” செய்யும் பலரில் நானும் ஒருவன்.

“ தேசம் முன்னேறிச் செல்ல முயலும் ஒவ்வொரு முறையும்; சிலர் பின்னோக்கி இழுத்தால் என்ன செய்வது”.
குறிப்பிட்ட மதம் மீண்டும் விமரிசனத்திற்கு உண்டாகலாம். ஆனால் இதற்கு முழுமையான தீர்வு????

Sunday, 23 November 2008

விசிலடிச்சான் குஞ்சுகள்(???)



ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

ஈழத் தமிழர் பிரச்சினை:வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம்-ரஜினிகாந்த்
(ரஜினி ரசிகர்கள் சும்மா விசிலடிச்சு ரகளை செய்ய மட்டும்தான் லாயக்கு எனக் கூறுபவர்களுக்கு)
நலத்திட்ட உதவிகள், ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு உதவி என்று வழக்கமாக செய்து வந்தாலும் இது சற்றே வித்தியாசமானது! கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது ரசிகர்களால் (மட்டுமே) நடத்தப்படுவது. இதனால் எதுவும் இலங்கையில் மாறப் போவதில்லை; இருப்பினும் ஒரு தார்மீக முறையில் இது ஒரு உத்வேகத்தை அளிக்கும் வாழ்த்துக்கள்

மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!
இலங்கையில் தமிழர்கள் காயம்பட்டு துடிக்கும் இந்த தருணத்தில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். எனது இந்த அறிவிப்பு அவர்களது அமைதி முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்', என நடிகர் ரஜினிகாந்த் விடுத்த செய்தியின் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இது ஒரு தொடக்கம் மட்டுமே

Wednesday, 19 November 2008

கெட்ட பையன் சார் இவன்



ஆத்திரம், இயலாமை, அவமானம், விரக்தி, வேதனை இது அத்தனையும் ஒரே காட்சியில்!
அதிலும் “ரெண்டு கையும், காலும் போனாக் கூட காளி பொழச்சிக்குவான் சார், கெட்ட பயன் சார் இவன்” என்று கூறிவிட்டு அப்டியே மேலேப் பார்க்கும் அந்த ஒரு காட்சியில் உண்மையிலேயே ஒரு அருமையான நடிகனாக உருவெடுத்திருக்க வேண்டியவரை இழந்து விட்டோமோ எனத் தோன்றுகிறது! இருந்தாலும் ஒரு ருபாயை சுண்டி விடும் “சிவாஜி” யும் கலக்கல்தான்!

Monday, 17 November 2008

இவர் வழி; தனி வழி.......


வாரணம் ஆயிரம்.

கவுதம் + சூர்யா என்ற பெயர்களே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது... வீண்போகவில்லை.
நான் சூர்யாவின் ஒவ்வொரு படம் பார்க்கும் போதும்; அவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் நினைவுக்கு வரும். ஆடத் தெரியாமல், நடிக்கவும் தெரியாமல் இருந்த காலம். நந்தாவுக்கு பின்னர் அவரின் “ரேஞ்சே” வேறாகிவிட்டது.
விஜய்யும், அஜீத்தும் ஆடும் ஆட்டம் சற்றே அலுக்க ஆரம்பித்து விட்டது. வரவர “ச்வுண்ட்” அதிகமாயிடிச்சி.
ஆனால் முயல்-ஆமை போட்டி போல; சிறிது கூட சத்தமில்லாது, ஜால்ரா இல்லாது சூர்யா ஜெயிக்குறாருபா! மைக்கேல் ஜாக்ஸன் போல ஆடும் அந்தப் பாட்டு கலக்கல்!
அதுவும் இந்தப் படத்தில் மனதை உலுக்கும்/ வருடும் காட்சிகள் அருமை! (அப்பா சூர்யா ரத்த வாந்தி எடுத்த பின் சிம்ரனிடம் நான் மேலே போகும் நேரம் வந்து விட்டது என்பதை சைகையால் குறிப்பிடுவது,சமீரா ரெட்டி "what have u done to me?" என்று சூர்யாவிடம் கேட்டு பின்னர் சூர்யாவைக் காதலிப்பதாக கூறுவது,சூர்யாவின் தங்கை தனது ஒரு மாத சம்பளத்தை வீடு கட்டுவதற்காக தனது "contribution"ஆக கொடுப்பது, போதையில் விழுந்த சூர்யாவிடம் சிம்ரன் ”வெளியே எங்கேயாச்சும் போய்ட்டு வா; ஆனா திரும்பி எங்களிடம் வரனும்” என்பது, தனது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அப்பாவிடம் சொல்வது என்று அருமை.அதிலும் அப்பா சூர்யா மகனிடம் “உன் பையன் கதை கேட்கிறான்; ஆனால் என்னால முடியலை” என்று கூறும் போது மனம் லேசாக அதிர்கிறது.
அந்தக் காலத்து சூர்யா முதல் டீன் ஏஜ் (ஆர்த்திதான் இப்ப இந்த உதடுக்கு இப்போ மருந்து போடுவா என்று கூறுவது செம நக்கல்), நடுத்தர வயது, வயதான சூர்யா வரை மிகத் தேர்ந்த நடிப்பு.
கவுதம் படத்தில் காதல் காட்சிகள் இயற்க்கையாக இருக்கும், வசனம் இயல்பாக வரும்( காக்க காக்கவில் “ஜோ” சொல்லும் its a girly thing" ஒரு உ.ம்). இதிலும் அப்படியே ஆனாலும் சமீரா ரெட்டியும், திவ்யாவும் “ஜோ” அளவிற்கு மனசுக்கு ஒப்பலை! ஹிஹிஹி.....
முதல் பாதியில் மிகத் தெளிவான நீரோடை போல போகும் படம்; பிற்பாதியில் லேசாக தடுமாறுகிறது; கத்திரி போட்டால் நல்லது (குத்து பாட்டு, கடைசியில் தீவிரவாதிகளுடன் மோதல் தேவையில்லை)
(கவுதம் சிறிது பயந்துட்டாரோ).
இசை- ஹாரிஸ்.கலக்கல் (கவுதம் கூட சண்டையாமே!!)
படம் முடிந்து வந்த பின்பும் சிறு நெருடல்
1) ” சூர்யா படத்தில் தமிழரா (அ) மலையாளியா?
2)மேஜர் சூர்யாவின் வீடு இருப்பது சென்னையிலா / டெல்லியிலா?
3) ஆங்கிலத்தை விடுங்க... ஹிந்தி வசனம் அதிகமே! ( ஹம் ஹிந்தி ஜாந்தா ஹை!)

Friday, 14 November 2008

மனிதம் செத்து விட்டது!!!

என்ன சொல்வது; எங்கிருந்து தொடங்குவது என்றும் தெரியவில்லை!...
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரம் மிகுந்த அதிர்ச்சியளித்தது.
இவனுங்கதான் நாளைக்கு சட்டத்தை காக்கப் போகிறவர்கள்!!!!
சாலையில் ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தால் கூட சிறிதேனும் இரக்கம் காட்டும் மனித நேயம் செத்தே போய் விட்டதா??
இது வெறும் மாணவர் பிரச்சினை மட்டும் அல்ல.... கண்டிப்பாக அரசியலும் உண்டு! மின்வெட்டும், விலவாசி உயர்வும் மறக்கடிக்கப் பட்டுவிடும்.
கமிஷனர், கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் என்று வழக்கம் போல “வெளக்கென” சம்பிரதாயம் ஆரம்பித்தாயிற்று. அடிபட்ட மாணவனின் பெற்றோரிடம் “கண்ணீர் பேட்டி”, நடுங்க வைத்த மாணவர் படை”, காவல்துறை அலட்சியம்” என்று கவர் ஸ்டோரி ரெடியாகயிருக்கும்.
3 பேர் மதுரையில் “தினகரன்” அலுவலகத்தில் எரிக்கப் பட்ட போதே “அழகிரி தாண்டவம்” என்று “ரைமிங்”காக எழுதியவர்கள்தானே நாம்!!
முதல்வன் படத்தில் வந்த காட்சி போலத்தான் இருந்தது!
மனசு உண்மையாகவே நடுங்குது.... போற போக்கப் பார்த்தா “நமக்கு நாமே” கொள்ளி வைத்துக் கொள்வோம் போல உள்ளது!.
கூட்டணி பிரச்சினை, மின்வெட்டு.... போன்றவற்றில் இருந்து கவனம் கண்டிப்பாக திசை திருப்ப எடுக்கப்பட்ட ஒரு செயலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. விசாரித்தால் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் “கல்லூரியைச் சேராத ரவுடிகள்” இருப்பார்கள்!
மு.க விலகிவிட்டு ஓய்வெடுக்கலாம்!